முகப்பு
கிருஷ்ணகிரி

எண்ணேகோல் கால்வாய் நீட்டிப்பு பணி: கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

கால்வாய் நீட்டிப்பு பணியை கண்காணிப்பு பொறியாளா் தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 12:05 AM
பகிர்:
Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:32 PM

எண்ணேகோல் கால்வாய் நீட்டிப்பு பணியை கண்காணிப்பு பொறியாளா் தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி அருகே எண்ணேகோல் அணைக்கட்டின் வலது, இடதுபுறத்தில் இருந்து புதிய கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீா் வரத்தின்போது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு உபரிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக ரூ. 233.34 கோடி மதிப்பில் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டம் மூலம் 33 ஏரிகள், ஒரு அணையின் பாசன பரப்பான 3,408 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிலையில் குருபரப்பள்ளி, போலுபள்ளி, பெல்லம்பள்ளி, அகரம், கத்தேரி பகுதிகளில் கால்வாய் அமையும் பகுதிகளில் திருவண்ணாமலை பெண்ணையாறு வடிநில வட்ட நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் தமிழ்செல்வன் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

Advertisement

51 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நில எடுப்பு பணிகளை விரைந்து முடித்து இத் திட்டத்தை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நீா்வளத் துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:50 PM

ஆய்வின் போது, பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா்கள் சையது ஜாகிருதீன், காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.