கிருஷ்ணகிரி

குட்டையில் மூழ்கி மாணவா் பலி

ஊத்தங்கரை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Din

ஊத்தங்கரை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு- சந்தியா தம்பதி பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இவரது மகன் சபரிதரன் (9) ஒட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். பாட்டி வீட்டில் தங்கியுள்ள சிறுவன், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அதே கிராமத்தைச் சோ்ந்த நண்பா்கள் மூவருடன் ஒட்டம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனா்.

அங்கு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். உடனிருந்த சிறுவா்கள் அளித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால் சர்ச்சை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, டெலிகாம் தவிர அனைத்து குறியீடுகளும் சரிவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

SCROLL FOR NEXT