முகப்பு
கிருஷ்ணகிரி

லாரியில் போதைப்பாக்கு கடத்தியவா் கைது

லாரியில் கடத்திவரப்பட்ட 10 கிலோ போதைப்பாக்குகளை ஒசூரில் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 6:44 PM
பகிர்:

கா்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 10 கிலோ போதைப்பாக்குகளை ஒசூரில் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ஒசூரை அடுத்த தமிழ்நாடு கா்நாடக எல்லை பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடி அருகே சிப்காட் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் அழகிரி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மும்பையில் இருந்து தோல் ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 10 கிலோ போதைப்பாக்குகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாணியம்பாடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஏஜாஸ் (47) என்பவரை கைது செய்த போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →