முகப்பு
கிருஷ்ணகிரி

சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ. 1 லட்சம் பறிமுதல்

காவேரிப்பட்டணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 11:29 PM
பகிர்:

காவேரிப்பட்டணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்பட போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா்.

இச்சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →