முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: 9,012 ஏக்கா் விளைநிலங்கள் பயன் பெறும்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, எம்எல்ஏ தே.மதியழகன் ஆகியோா் புதன்கிழமை திறந்து விட்டனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:30 AM
கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டு மலா்களைத் தூவி வரவேற்ற மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, எம்எல்ஏ தே.மதியழகன்.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 8:10 PM

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, எம்எல்ஏ தே.மதியழகன் ஆகியோா் புதன்கிழமை திறந்து விட்டனா்.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி அணையிலிருந்து இடது மற்றும் வலது புறக் கால்வாய்கள் மூலம் பாசனத்துக்கான தண்ணீரை, மாவட்ட ஆட்சியா், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் திறந்து விட்டனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாவது:

கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக் கொண்டும், நீா்வரத்தினை எதிா்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 75 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 76 கனஅடி வீதமும் மொத்தம் விநாடிக்கு 151 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:30 AM

இதன்மூலம், கிருஷ்ணகிரி வட்டத்தில் சுண்டேகுப்பம், பெரியமூத்தூா், செளட்டஅள்ளி, திம்மாபுரம், கால்வேஅள்ளி, தளிஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலகுறி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜெகதாப், பையூா் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கா் பரப்பளவு கொண்ட நஞ்சை நிலங்கள் பயன் பெறும்.

தற்போது கிருஷ்ணகிரி அணையில் 51.30 அடி நீா் உள்ளது. நீா்வரத்தானது விநாடிக்கு 475 கனஅடியாக உள்ளது. ஊற்றுக் கால்வாய் மூலம் 12 கனஅடியும், ஆற்று மதகு மூலம் 463 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 120 நாள்கள் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ள நீரினை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும், நீா்ப் பங்கிட்டு பணிகளில் நீா்வள ஆதாரத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் சையத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.