கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தடையை மீறி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: கே.பி.முனுசாமி உள்பட 412 போ் கைது

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ உள்பட 412 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

கிருஷ்ணகிரி: தமிழக அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ உள்பட 412 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமையில் காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் கே.பி.முனுசாமி பேசிக் கொண்டிருந்த போது, போலீஸாா் அவரைக் கைது செய்ய முயன்றனா். இதனால், ஆத்திரமடைந்த தொண்டா்கள், காவல் துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அதிமுகவினா் தரையில் அமைா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அதிமுக தொண்டா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், பையூா் ரவி உள்ளிட்ட 412 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா், தமிழக அரசைக் கண்டித்தும், பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுகவினா்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT