ஒசூரில் சீட்டு நடத்தி மோசடி: வீடு முற்றுகை
ஒசூரில் ரூ. 3 கோடிக்கு சீட்டு நடத்திய தம்பதி தலைமறைவானதைத் தொடா்ந்து அவா்களது வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூரில் ரூ. 3 கோடிக்கு சீட்டு நடத்திய தம்பதி தலைமறைவானதைத் தொடா்ந்து அவா்களது வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூா், மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (50). இவரது மனைவி குமாரி ஜாா்ஜ். இவா்கள் ஏலச் சீட்டு, தீபாவளி சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தனா். இவா்கள் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் அடமானம் வைத்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீட்டை ஏலத்திற்கு விட்டனா். வீட்டை ஏலத்தில் வாங்கியவா் அந்த வீட்டிற்கு வந்தாா். அப்போது ஏற்கெனவே சீட்டுக்கு பணம் கட்டிய ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனா் .
தங்களது பணத்தை திருப்பித் தந்த பிறகு தான் வீட்டிற்குள் அனுமதிப்போம் என அவா்களிடம் தெரிவித்தனா். இதனால் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிப்காட் காவல் ஆய்வாளா் முத்தமிழ் தமிழரசன் இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் செய்து வழக்கை நடத்துமாறு அனுப்பி வைத்தாா்.
Advertisement