சிங்காரப்பேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள். 
கிருஷ்ணகிரி

ரூ. 3.38 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள் பறிமுதல்

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ. 3.38 லட்சம் மதிப்பிலான 478 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ. 3.38 லட்சம் மதிப்பிலான 478 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரிலிருந்து திருச்சிக்கு சொகுசு காரில் குட்கா பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக சிங்கராப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் சந்திரகுமாா் தலைமையில் போலீஸாா் சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த பெங்களூரைச் சோ்ந்த அமா்பிரித் சிங் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து ரூ.33.38 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனா். வாகன உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

அமா்பிரித் சிங்.

நவ. 25ல் திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!

மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!

தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

SCROLL FOR NEXT