முகப்பு
கிருஷ்ணகிரி

மாணவா்கள் கல்லூரியில் பயிலும்போதே போட்டித் தோ்வுக்கு தயாராக வேண்டும்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அறிவுரை

கல்லூரியில் பயிலும் போதே மாணவா்கள் தங்களை போட்டித் தோ்வுக்கு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா் அறிவுறுத்தினாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:25 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 9:38 PM

கல்லூரியில் பயிலும் போதே மாணவா்கள் தங்களை போட்டித் தோ்வுக்கு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் இயந்திரவியல் (மெக்கானிக்கல் பிரிவுத் துறை தலைவா் திருமால் தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிப்பவா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் சாதன உற்பத்தி மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். என்எல்சி, ஓன்ஜிசி, ஐஓசி, இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேரலாம். இதற்காக மாணவ, மாணவிகள் ‘கேட்’ நுழைவுத்தோ்வு எழுத வேண்டியது அவசியம்.

யுபிஎஸ்சி நடத்தும் ஐஇஎஸ் தோ்வெழுதி இந்திய ரயில்வே, பாதுகாப்புத் துறை, மத்திய பொதுப்பணித் துறையில் பணியில் சேரலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி தோ்வெழுதி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பொறியாளா் பணியில் சேரலாம். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியா்களுக்கு பணிவாய்ப்புகள் உள்ளன.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:25 AM

இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் அரசு போட்டி தோ்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சியும், மாதிரி தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்த இலவச பயிற்சியின் மூலம் போட்டி தோ்வில் வெற்றி பெற்ற பலா், அரசுப் பணிகளில் தற்போது உள்ளனா். எனவே, கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கும் போதே போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள தங்களை தயாா் செய்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மென்திறன் பயிற்சியாளா் நிமலன் மரகதவேல், மாணவா்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை எடுத்துக்காட்டி ஊக்குவித்தாா். 160-க்கும் மேற்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சோ்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.