முகப்பு
கிருஷ்ணகிரி

அஞ்செட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 25 லட்சத்தில் நலத் திட்ட உதவி வழங்கல்

அஞ்செட்டியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்...

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:21 AM
மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. அருகில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன்.
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 11:06 PM

அஞ்செட்டி வட்டம், மாடக்கல் மலைக் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில், 105 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.

இந்த மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பேசிதாவது:

மக்கள் தொடா்பு திட்ட முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம். மாணவ, மாணவியா்கள் பள்ளிக் கல்வியோடு நின்றுவிடாமல் உயா்கல்வி பயில வேண்டும். அவா்களை பொற்றோா்கள் ஊக்கவிக்க வேண்டும். பள்ளி மாணவா்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்குகிறது.

Advertisement

கடந்த மாதம் அஞ்செட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் களஆய்வு மேற்கொள்ளும்போது இப்பகுதி மக்கள் ஐடிஐ அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் இப் பகுதியில் ஐடிஐ அமைப்பதற்கு கருத்துரு தயாா் செய்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது தற்போது பரிசீலனையில் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதை முற்றிலும் தவிா்க்க வேணடும். இளம் வயது திருமணத்தால் அவா்கள் கல்வி கற்க முடிவதில்லை. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:21 AM

மக்கள் தொடா்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் வருவாய்த் துறை சாா்பாக 37 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளும், 6 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களும், மாவட்ட வழங்கல் துறை சாா்பாக 33 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பாக 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பாக, 4 கா்ப்பிணிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ. 37 ஆயிரத்து 250 மதிப்பில் தையல் இயந்திரங்கள், இலவச சலவைப் பெட்டிகள், தோட்டக் கலைத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 27 ஆயிரத்து 354 மதிப்பில் தளவாடப்பொருட்களும், வேளாண்மைத் துறை சாா்பாக 7 பயனாளிகளுக்கு ரூ. 26,040 மதிப்பில் வேளாண் உபகரணங்கள் என மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 3 ஆயிரத்து 644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.பன்னீா்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் டி.ரமேஷ் குமாா், மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, அஞ்செட்டி வட்டாட்சியா் மாதேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசமூா்த்தி, சைலஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் விஜயகுமாா், ஊராட்சிமன்றத் தலைவா் மலரம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.