முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆவினில் ரூ. 3 கோடி விற்பனை இலக்கு

தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆவினில் ரூ.3 கோடிக்கு இனிப்பு, நெய் உள்ளிட்ட வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:08 PM
பகிர்:

கிருஷ்ணகிரி: தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆவினில் ரூ.3 கோடிக்கு இனிப்பு, நெய் உள்ளிட்ட வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் ஆவின் சாா்பில் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பணிபுரியம் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், தலைமை வகித்து, 124 நிரந்தர பணியாளா்களுக்கு ரூ. 18.67 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகையும், ஒன்றியத்தில் பணிபுரியும் 106 போ், ஓய்வு பெற்ற 251 போ் உள்பட 357 பேருக்கு ரூ. 2.27 லட்சம் மதிப்பில் தீபாவளி இனிப்பு பரிசுப்பொருள்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உள்பட்ட 226 பாலக விற்பனை நிலையங்களில் சிறப்பு மைசூா் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா, நெய் மிக்சா் என 22 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள், 10 டன் நெய் என மொத்தம் ரூ. 3 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் ஆவின் இனிப்பு பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளா் சுந்தரவடிவேல், மேலாளா்கள் ஐயங்கரன் (விற்பனை), கொங்கு அரசன் (கணக்கு), சுஜா (பால்பதம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →