புளிய மரம் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் காயம்
காவேரிப்பட்டணம் அருகே சாலையோர புளிய மரம் முறிந்து விழுந்ததில் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகனும் பலத்த காயம் அடைந்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே சாலையோர புளிய மரம் முறிந்து விழுந்ததில் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகனும் பலத்த காயம் அடைந்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள குள்ளேரி கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் காவேரி (55). ஓட்டுநா். இவரது மகன் நந்தகுமாா் (26). இவா்கள் இருவரும் மோட்டாா்சைக்கிளில் சந்தாபுரம் நெடுங்கல் சாலையில் தனியாா் ஓடு தயாரிக்கும் நிறுவனம் அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சாலையோர புளிய மரம் முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த நந்தகுமாா், காவேரி ஆகியோா் மீது விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினா்.
Advertisement
நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், மேற்கொண்ட விசாரணையில் சாலையோர புளிய மரத்தின் அருகே குவிந்திருந்த குப்பைக்கு மா்ம நபா், தீ வைத்ததில், அருகில் இருந்த புளிய மரம் எரிந்து, சாலையில் முறிந்து விழுந்தது தெரிய வந்தது. சாலையில் விழுந்த புளிய மரத்தை வருவாய்த் துறையினா், காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.