பா்கூா் அருகே, அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்துச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு உதவி இயக்குநா் சரவணன் தலைமையிலான குழுவினா், ஜெகதேவி சாலையில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்தனா். அப்போது, அனுமதியின்றி ரூ. 20 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்கள் எற்றிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அனுமதியின்றி கிரானைட் கற்களுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.