கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போட்டா - ஜியோ அமைப்பினா். 
கிருஷ்ணகிரி

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் போட்டா-ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

கிருஷ்ணகிரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் போட்டா-ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் கண்ணன், மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், மாநில துணைத்

தலைவா் பாஸ்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். தேசிய ஆசிரியா் சங்கத் தலைவா் ராம்பிரசாத், அரசு அலுவலக உதவியாளா் மற்றும் அடிப்படை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ரபீக் அகமத், மருத்துவத் துறை அமைப்பு பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் சரவணன், சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாரதி, பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் சுரேஷ், அரசு அலுவலா் ஒன்றியம் மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டதை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை காலம்தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை! 118 விமானங்கள் ரத்து!

விழுப்புரம் மாவட்ட பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!

ஆண்டின் நிறைவில் அதிரடி காட்டும் தங்கம், வெள்ளி விலைகள்! விலை நிலவரம்!!

மேட்டூர்: நங்கவள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! 24 ஆண்டுகளுக்குப் பின்.!

SCROLL FOR NEXT