கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

Din

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவயனூா் முனியப்பன் கோயிலில் பூசாரியாக இருந்தாா். புதன்கிழமை கோயிலில் வழிபாட்டின் போது பின்பகுதியில் உள்ள இரும்பு தகரத்தை தொட்டாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மாதையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விசாரணையில் மின் கம்பி உரசியதால் தகரத்தின் வழியாக மாதையன் மீது மின்சாரம் பாய்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT