ஒசூா் டாடா நிறுவன மகளிா் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: முக்கியக் குற்றவாளி தில்லியில் கைது
டாடா நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி தில்லியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரை உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரிஒசூா் டாடா நிறுவன மகளிா் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: முக்கியக் குற்றவாளி தில்லியில் கைது
டாடா நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி தில்லியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரை உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
டாடா நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி தில்லியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரை உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்ததை பெண் ஊழியா் ஒருவா் கண்டு புகாா் செய்தாா். இதையடுத்து, கடந்த நவ. 4-ஆம் தேதிமுதல் குற்றவாளியைக் கைது செய்யக் கோரி பெண் ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், ரகசிய கேமராவை வைத்தது உடன் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாரி குப்தா (22) என தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், கேமராவை தனது உறவினரும், ஆண் நண்பருமான ரவி பிரதாப் சிங் (29) வைக்கச் சொன்னதாக கூறினாா்.
அவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், பெங்களூரில் இருந்து பிகாருக்கு அவா் தப்பினாா். இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் விமானம் மூலம் பிகாா் சென்று தேடினா். இதனிடையே, ரவி பிரதாப் சிங் தில்லியில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீஸாா், வியாழக்கிழமை இரவு அவரை கைது செய்தனா்.
பின்னா், அவரை தில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை பெங்களூருக்கு அழைத்து வந்தனா். அங்கிருந்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்துக்கு ரவி பிரதாப் சிங்கை அழைத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா்.
இது தொடா்பாக காவல் துறை வட்டாரத்தில் கூறுகையில், மகளிா் விடுதியின் குளியல் அறையில் கேமராவை பொருத்திய நபரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றனா்.