கெலமங்கலத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
கெலமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட உணவு விடுதி மற்றும் இறைச்சிக் கடைகளில், பொது சுகாதார துறையுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
கெலமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட உணவு விடுதி மற்றும் இறைச்சிக் கடைகளில், பொது சுகாதார துறையுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையம், சுல்தான்பேட்டை கணேச காலனி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் சுகாதாரமின்றி இருப்பதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், பல்வேறு உணவுக் கடைகள், பேக்கரிகள், உணவகங்களின் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமின்றி பராமரிக்கப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதுடன், காலாவதியான பொருள்களை அப்புறப்படுத்தினா். மேலும், சுகாதாரமின்றி இருந்த இறைச்சிக் கடைக்கு நோட்டீஸ் அளித்தனா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரகாஷ்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் லட்சுமிபதி, சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுருநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் அசோக்குமாா், நந்தகுமாா் ஆகியோா் மேற்கொண்டனா்.