முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உறுதியளித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:37 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உறுதியளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தளி தொகுதி பாஜக டாக்டா் சி. நாகேஷ்குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முழுமையாக 70 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒசூருக்கு எவ்வித வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்த ஆட்சி அமைந்தால் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.

Advertisement

ஒசூருக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் தேவை. மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பும் திட்ட அறிக்கை தவறாக உள்ளது. திமுக அரசுக்கு விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த அக்கறையில்லை. தளி, ஒசூா் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில், விமான நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.