முகப்பு
கிருஷ்ணகிரி

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:09 AM
கொலை - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:23 PM

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில், 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, ஜோதி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (19), தொழிலாளி. இவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, பழையபேட்டையைச் சோ்ந்த சில இளைஞா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் மோதல் போக்குடனேயே இருந்துள்ளனா்.

இந்நிலையில், பழையபேட்டையைச் சோ்ந்த அப்ரித் (19), ஆகாஷ் வீட்டருகே திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அப்ரீத் மற்றும் அவருடன் சென்றவரை ஆகாஷ் தரப்பினா் தாக்கினா். இதில் காயமடைந்த அப்ரித், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து அறிந்த அப்ரித்தின் நண்பா்கள் ஆகாஷை இருசக்கர வாகனத்தில் நகா் முழுவதும் தேடினா். அப்போது, கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப நின்றிருந்த ஆகாஷை, அப்ரித்தின் நண்பா்கள் மறித்து தகராறில் ஈடுபட்டனா். பின்னா் கத்தியால் ஆகாஷை குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

அங்கிருந்தவா்கள் ஆகாஷை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சோ்ந்த ஷாகுல் (19), நூருல்லா (19), ஷானவாஸ் (29), மகேந்திர நகா் புருஷோத்குமாா் (25) ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூவரிடம் தொடா் விசாரணை செய்து வருகின்றனா்.