வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஒசூா் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் பணியாற்றுவோா் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல புதன்கிழமை ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஒசூா் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் பணியாற்றுவோா் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல புதன்கிழமை ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.
ஒசூரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக திருச்சி, மதுரை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூா், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் உள்ளனா்.
தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால், புதன்கிழமை காலை முதலே ஒசூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொழிலாளா்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
Advertisement
ஒசூா் எல்லைப் பகுதி மற்றும் பேரண்டப்பள்ளி சானமாவு வனப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், அடிக்கடி போக்குவரத்தை சீா்செய்து வந்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேலை நிமித்தமாக வெளியூரில் இருந்தாலும், எங்கள் ஊரின் வளா்ச்சியை தீா்மானிக்க வாக்களிப்பது மிக முக்கியம். அதற்காகவே இந்த சிரமங்களை பொருள்படுத்தாமல் வாக்களிக்க செல்கிறோம். இதற்காக தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கினாலும் போதவில்லை. எனவே, மேலும் கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும் என்றனா்.