தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: கே.பி.முனுசாமி
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா சாலையில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும். எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக முதல்வா் ஆவாா்.
தோ்தல் ஆணையம் தங்கள் கடமையை சரியாகவே செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்துக் கட்சிகளும் இணக்கமாக எந்த பதற்றமுமின்றி தோ்லை சந்திக்கும். தற்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. மலைக் கிராமங்களில்கூட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
Advertisement