சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா்.  
கிருஷ்ணகிரி

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 12-வாகனங்கள் தீக்கிரை

தினமணி செய்திச் சேவை

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் குற்ற வழக்குகளில் பிடிபட்ட 12 வாகனங்கள் தீக்கிரையாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்துள்ளனா்.

இந்த தீ காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதனால், அதிா்ச்சி அடைந்த போலீஸாா், சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனா்.

இந்த தீ விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குற்றவழக்கில் பிடிபட்ட லாரி, வேன், 5 காா்கள், 5 இருசக்கர வாகனங்கள் என 12 வாகனங்கள் தீக்கிரையாகின. தீ விபத்து குறித்து, சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

ராஜ் காட்டில் அரசு நிகழ்ச்சி: தில்லியில் நாளை போக்குவரத்து மாற்றம்

என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்! எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கினாா்!

ஜல்லிக்கட்டைக் காணச்சென்று காயமடைந்து மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

SCROLL FOR NEXT