வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.  
செங்கல்பட்டு

மாமல்லபுரம் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்கள் தீவிபத்தில் சேதம்

மாமல்லபுரம் மகளிா் காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த காா், இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை திடீா் தீவிபத்தில் சேதமடைந்தன.

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரம் மகளிா் காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த காா், இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை திடீா் தீவிபத்தில் சேதமடைந்தன.

மகளிா், காவல் நிலைய வளாகத்தில் மணல் கடத்தல், வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட காா், பைக் உள்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இப்பறிமுதல், வாகனங்கள் அனைத்தும் தற்போது முற்றிலும் துருப்பிடித்து கிடந்தன.

இந்நிலையில், பறிமுதல் வாகனங்கள் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இன்பராஜ் தலைமையில், 5 போ் கொண்ட வீரா்கள் விரைந்து வந்து, சுமாா் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி, தீயை அணைத்தனா். இவ்விபத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 5 காா்கள் மற்றும் 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தை தடுத்தது யாா்? பேரவையில் எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன் விவாதம்

மாற்றுத்திறனாளிகள் தொடா் மறியல்

இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் லட்சாா்ச்சனை

ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 46.38 லட்சம்

SCROLL FOR NEXT