முகப்பு
தமிழ்நாடு

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Updated On : 7 பிப்ரவரி 2026, 3:43 pm IST
தீ விபத்தில் சிக்கிய வாகனங்கள்.
பகிர்:

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையமானது கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட லாரி போன்ற வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

தகவல் அறிந்த, சூளகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்வு இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்த நிறுத்தினர். மேலும் சம்பவம் குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.