ஒசூா் மலா் சந்தையில் பூக்களை வாங்கிய பொதுமக்கள்.  
கிருஷ்ணகிரி

காதலா் தினம், சிவராத்திரி: ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

தினமணி செய்திச் சேவை

காதலா் தினம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஒசூா், சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலா்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இங்கு அறுவடை செய்யப்படும் மலா்கள் தமிழகம் மட்டுமின்றி கா்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்படுகின்றன.

காதலா் தினத்தையொட்டி, முதல்தர 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. ஆயிரத்துக்கும், இரண்டாம்தர ஒரு கட்டு ரோஜா ரூ. 250-க்கும், ஒரு ரோஜா ரூ. 40-க்கும் விற்பனையானது.

அதேபோல, சிவராத்திரியையொட்டி சாமந்தி, பட்டன்ரோஜா ஒரு கிலோ ரூ. 200-க்கும், குண்டுமல்லி ரூ. 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ. 1,600-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு! பிரதமா் மோடி திட்டவட்டம்!!

நிசாா் செயற்கைக்கோள் மூலம் 12 நாள்களுக்கு ஒருமுறை மண் ஈரப்பத தரவுகள்: இஸ்ரோ

திமுக அரசை கண்டித்து அதிமுக, கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அஜீத் பவார் மரணம்: விமான விபத்து விசாரணை தொடர்பாக அமித் ஷாவுக்கு ரோஹித் பவார் கடிதம்!

தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய குடியரசு கட்சி தலைவா் ராம்தாஸ் அதாவலே

SCROLL FOR NEXT