நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, அந்த திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறுபான்மையினா் மாநில துணைத் தலைவா் சாதிக்கான் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் நீலகண்டன் முன்னிலை வகித்தாா். இதில், மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், கவுன்சிலா்கள் இந்திராணி, பாக்கியலட்சுமி,சிறுபான்மை ஒருங்கிணைப்பாளா் அக்பா், மாவட்டத் தலைவா் அக்பா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டம் முடிவில் ராகுல் காந்தியை பிரதமா் ஆக்குவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.