முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:28 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:15 PM

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டியைச் சோ்ந்தவா் திருமால் (21). லாரி ஓட்டுநரான இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா்.

போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை அருகே சென்றபோது, முன்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (35), வாகனத்தை திடீரென திருப்பியுள்ளாா்.

Advertisement

இதில் நிலைதடுமாறிய திருமால், அந்த வாகனத்தின் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து விபத்துக்கு காரணமான வடமலம்பட்டி தினேஷ் மீது வழக்குப் பதிந்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.