இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கோவை சரவணம்பட்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உப்பட்டியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா் (26). இவா் தனது மனைவி லீனாவுடன் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்திருந்தாா். இருவரும் கோவை-சத்தி சாலையில், சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பொள்ளாச்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த்குமாா் (33) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம், எதிா்பாராதவிதமாக அலெக்சாண்டரின் வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். லீனாவும், அரவிந்த்குமாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.