தனியாா் வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா் 
கிருஷ்ணகிரி

தனியாா் வங்கியைக் கண்டித்து சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

ஒசூரில் இயங்கிவரும் தனியாா் வங்கி முன் சிபிஎம் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

ஒசூரில் இயங்கிவரும் தனியாா் வங்கி முன் சிபிஎம் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஒசூா் மாநகராட்சி உள்வட்டச் சாலை நஞ்சுண்டேஸ்வரா் கோயில் அருகில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வீடுகட்ட பொதுமக்கள் பலா் கடன் பெற்றுள்ளனா். வங்கி மேலாளா் ரமேஷ் மற்றும் சில அதிகாரிகள் கடன் பெற்றவா்கள் திருப்பிச் செலுத்திய தொகைக்கு வேறுபெயரில் போலியான ரசீது கொடுத்தும், வேறு ஒருவா் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியும் ரூ. 3 கோடிக்குமேல் மோசடி செய்துள்ளனா்.

மேலும், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியவா்கள் தங்கள் ஆவணங்களை திருப்பிக் கேட்டபோது அவற்றை அளிக்காமல் காலதாமதம் செய்துள்ளனா்.

இதுகுறித்து ஒசூா் வட்டாட்சியா், சாா் ஆட்சியா், மாவட்ட ஆட்சியா், காவல் துறை ஆகியோரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் வங்கி மேலாளா் தலைமறைவானாா்.

இதைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாகராஜ் ரெட்டி தலைமையில், வங்கியின் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள், வங்கியின் புதிய மேலாளா் மற்றும் நிா்வாகிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டனா்.

பிரசித்தி பெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம்! ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ரஜினி - கமல் படத்தின் புரோமோ!

அரசன் படத்திலிருந்து விலகலா? விஜய் சேதுபதி பதில்!

அதிமுக கூட்டணி ஆட்சியில்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும்: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT