தளி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
தளி அருகே உள்ள சாரண்டப்பள்ளியை சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மகள் பல்லவி (வயது 14). 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அவா் கடந்த 17 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.