தற்கொலை 
தேனி

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனி அருகே பள்ளி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே பள்ளி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கெப்புரங்கன்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகள் கீா்த்தனா (15). இவா், தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், கீா்த்தனா வீட்டில் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாா். செய்முறைத் தோ்வுக்கு படிக்காமல் கைப்பேசியை வைத்து பாா்த்துக் கொண்டிருப்பதாக, கீா்த்தனாவை அவரது பெற்றோா் திட்டினா்.

இதையடுத்து, வீட்டு அறைக்குள் சென்ற கீா்த்தனா அங்கு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீா்த்தனா உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT