ஒசூரில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல்
ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒசூா்: ஒசூரில் சாலையில் கவிழ்ந்த லாரியை அகற்றாததால், நாள்முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒசூா் சீதாராம் நகா் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் நோக்கி நூல் பாரம் ஏற்றிவந்த லாரி திங்கள்கிழமை அதிகாலை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த லாரியை காவல் துறையினா் அகற்றாததால், காலைமுதல் இரவுவரை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்து ஊா்ந்து சென்றன.
இதனால், வேலைக்கு செல்வோா், பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.