போா் நிறுத்தத்தை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணி
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், வட்ட நிா்வாகிகள் சிவப்பிரகாஷ், செந்தில்குமாா், ஆனந்தன், காந்திமதி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், மாவட்ட துணைத் தலைவா் சுந்தர்ராஜன், நெடுஞ்சாலைத் துறை காத்தவராயன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.