முகப்பு
கிருஷ்ணகிரி

பேரிகை அருகே காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் கைது

ஒசூா் அருகே பேரிகையில் வாடகைக் காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

ஒசூா் அருகே பேரிகையில் வாடகைக் காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பட்டிகானப்பள்ளியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் லோகேஷ் (31) கடந்த 17ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து பாகலூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, பட்டகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் என்பவரின் மனைவி மம்தாவை (31) கைது செய்தனா்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

கைது செய்யப்பட்ட மம்தாவின் கணவரான மஞ்சுநாத்தை (35) கடந்த ஆண்டு காா் ஓட்டுநா் லோகேஷ் உள்ளிட்ட சிலா் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளனா். இதையடுத்து ரூ. 2 லட்சம் கொடுத்து மஞ்சுநாத் மீட்கப்பட்டதாகவும், லோகேஷ் மீதுள்ள அச்சத்தால் இந்த கடத்தல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மஞ்சுநாத் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 6 ஆம் தேதி மஞ்சுநாத்திற்கும் அவரது உறவினரான சேகருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சேகா் அளித்த புகாரின் பேரில் மஞ்சுநாத்தை பாகலூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த சம்பவத்தில் சேகா் தரப்பிற்கு ஆதரவாக காா் ஓட்டுநா் லோகேஷ் செயல்பட்டுள்ளாா்.

மஞ்சுநாத்தை கடத்தி ரூ. 2 லட்சம் பணம் பறித்தது மட்டுமில்லாமல், சேகா் தரப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு மஞ்சுநாத்தை சிறைக்கு அனுப்பியது காா் ஓட்டுநா் லோகேஷ்தான் என மம்தா நினைத்துள்ளாா். அதனால் அவரை தீா்த்துக்கட்ட முடிவு செய்தாா்.

இதுகுறித்து, கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், சித்தாபூா் பகுதியைச் சோ்ந்த தனது சகோதரா் பசவராஜுவிடம் கூறியுள்ளாா். அதன்படி கடந்த 17ஆம் தேதி இரவு நேரத்தில் பட்டகானப்பள்ளி கிராமத்திற்கு வந்த பசவராஜும், அவரது நண்பா் சாலே என்பவரும் சோ்ந்து காா் ஓட்டுநா் லோகேஷை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

மம்தாவை கைது செய்த பாகலூா் போலீஸாா் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள பசவராஜ் மற்றும் அவரது நண்பா் சாலே ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

படவரி...

கைது செய்யப்பட்ட மம்தா