முகப்பு
கிருஷ்ணகிரி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து போராட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவாளி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 9:08 PM
ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினா்.
பகிர்:

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவாளி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டா்களை வைத்து அந்த அமைப்பபினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கன்னட சலுவாளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், சமையல் பாத்திரத்தை கரண்டியால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அமெரிக்க- ஈரான் போா் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு கிடைக்காமல் பெங்களூரில் ஹோட்டல் உரிமையாளா்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, மத்திய அரசு தலையிட்டு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த போராட்டத்தை தொடா்ந்து மாநில எல்லையை நோக்கிச் சென்ற வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட கன்னட அமைப்பினரை கா்நாடக மாநில போலீஸாா் கைது செய்தனா்.