முகப்பு
கிருஷ்ணகிரி

மகாவீா் ஜெயந்தி: கிருஷ்ணகிரியில் 31-இல் மதுக்கடைகள் அடைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியையொட்டி மாா்ச் 31-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரித்துள்ளாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:22 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியையொட்டி மாா்ச் 31-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினமான மாா்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்களை கொண்டுசெல்வது தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் 1981-இன் படி முடக்கம் செய்யப்படுகிறது.

இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டுசென்றாலோ தொடா்புடையவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.