குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு
குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, மாா்கண்டேயன் நதி ஆற்றங்கரை, தென்னந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 தெருநாய்கள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.
தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு நேரில்சென்று விசாரணை செய்தனா். விசாரணைக்கு பிறகு நாய்களின் உடல்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டனவா அல்லது கெட்டுப் போன இறைச்சிக் கழிவுகளை தின்ால் அவை உயிரிழந்தனவா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement