முகப்பு
நாமக்கல்

கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம்  காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

Updated On : 12 மே 2013, 5:30 am IST
பகிர்:

திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம்  காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

 மாணவர் நந்தகுமார் 1170 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்:  தமிழ்-191, ஆங்கிலம்-190,  இயற்பியல்-191, வேதியியல்-200, கணிதம்-198,   கணிப் பொறியியல்-200.

Advertisement

Advertisement

மாணவர் கவின்  வேதியியல், கணிதம், உயிரியல்  ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றுள்ளார். வேதியியல் பாடத்தில்  நந்தகுமார், பரத்குமார், கவின் ஆகியோர்  200-க்கு 200 பெற்றுள்ளனர். கணிதத்தில் விஷ்ணு, கவின் இருவரும் 200-க்கு 200 பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் கவின் 200-க்கு 200 பெற்றுள்ளார். கணிப்பொறியியல் பாடத்தில் ரம்யா, செüம்யா, நந்தகுமார், ஆனந்தராஜ், விஷ்ணு, நந்தினி ஆகியோர் 200 -க்கு 200 பெற்றுள்ளனர்.

தவிர, 1100-க்கு மேல் 44 பேரும், 1000-க்கு மேல் 102 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குநர்கள்  சிவா, வித்யா சிவா, தலைமை ஆசிரியை கலாவதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.