முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் சிக்கன நாணய சங்கத் தலைவர் பொறுப்பேற்பு

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் புதிய தலைவராக நகராட்சி வருவாய் உதவியாளர் டி.வி.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On : 12 மே 2013, 5:32 am IST
பகிர்:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் புதிய தலைவராக நகராட்சி வருவாய் உதவியாளர் டி.வி.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 இந்தச் சங்கத்தின் இயக்குநர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஏப்.4-ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டி ஏதுமில்லாததால், மனுத்தாக்கல் செய்த டி.வி.ராஜேந்திரன், வே.ஹரிபாஸ்கர், சு.சண்முகம், கே.சுப்பிரமணியம், அ.அமுதா, வி.கஸ்தூரி, பா.கனககுமாரி ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு பெற்றனர்.

 இந்த நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்.23-இல் நடைபெற்றது. இதில், தலைவராக டி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவராக வே.ஹரிபாஸ்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.