நாமக்கல்

அத்தனூர் சமத்துவபுர நுழைவு வாயிலை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

ராசிபுரம் அருகே அத்தனூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் நினைவு நுழைவு வாயிலை சீரமைக்க நகர வளர்ச்சி மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் நகர வளர்ச்சி மன்றம் சார்பில் அதன் தலைவர் வி.பாலு தலைமையில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூர் அருகே 1996-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவு நுழைவு வாயில் மற்றும் அவர் பெயர் பதித்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளன. எனவே, அகற்றப்பட்ட தந்தை பெரியார் நினைவு நுழைவு வாயில் மற்றும் பெரியார் பெயர் பதித்த கல்வெட்டை அதே இடத்தில் நிறுவப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர வளர்ச்சி மன்றச் செயலர் வழக்குரைஞர் த.கீதாலட்சுமி, நகர வளர்ச்சி மன்றப் பொருளாளர் எம்.பிலவேந்திரராஜ், மன்ற துணைச் செயலர்கள் த.தங்கதுரை, கே.குணசேகரன், விஜய் மக்கள் இயக்க நகரத் தலைவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன், கோல்டன் நற்பணி சங்கம் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலர் மனுவை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT