நாமக்கல்

நாமக்கல்லில்தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம்

DIN

நாமக்கல்லில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக, 100 பேருக்கு வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாத 100 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 வீதம் ரூ. 10,000 அபராதம் விதித்தனர்.
மேலும் காப்பீடு காலாவதியான நிலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 13 நபர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.13,000 உடனடியாக காப்பீட்டுத் தொகை வாங்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு படக்காட்சி வாகன ஓட்டிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
வாரத்தின் இரண்டு நாள்கள் வாகனத் தணிக்கை நடைபெறும் என போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT