திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன், செயல் இயக்குநர் கவிதா சீனிவாசன், முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
திருப்பூர் டிக்சி மனித வள மேம்பாட்டு நிறுவனத் தலைவர் சக்திவேல் தணிகாசலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோது, அறிவு, கடின உழைப்பு, எதிர்மறை எண்ணங்களை நீக்குதல், ஆன்மாவை உணர்தல் ஆகிய நான்கினையும் நாம் கடைப்பிடித்தால் வெற்றி நம் வசமாகும். கல்லூரிகளில் இதுபோன்ற விழாக்களில் சந்திக்கும் முன்னாள் மாணவர்களின் தொழில் சார்ந்த, நிறுவனம் சார்ந்த, தகவல்களைக் கேட்டுப்பெற்று, வரும் காலங்களில் நமது தொழில்களில் நாமும் கடைப்பிடித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பேராசிரியர் குணசீலன் நன்றி கூறினார்.