நாமக்கல்

டெங்குவைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தினமணி

ராசிபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ராசிபுரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் தலைமை வகித்தார். நகரச் செயலர் வீர.ஆதவன் வரவேற்றார். இதில், டெங்கு நோய் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனே பதவி விலக வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 இதில் கட்சியின் மாவட்டப் பொருளர் வ.அரசன், மாவட்ட துணைச் செயலர் நீலவானத்து நிலவன், வைகறை செல்வன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT