நாமக்கல் சார்-ஆட்சியராக பி.கிராந்திகுமார் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாமக்கல் கோட்டாட்சியராக பணியாற்றிய என்.ராஜசேகரன் அண்மையில் பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றிய பி.கிராந்திகுமார் நாமக்கல் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தெலுங்கான மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றிபெற்று, மத்திய அரசுப் பணியிலும், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
சார்-ஆட்சியரிடம், பணி இடமாறுதலில் செல்லும் கோட்டாட்சியர் எம்.ராஜசேகரன் பொறுப்பினை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சார்-ஆட்சியருக்கு நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை வருவாய் வட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.