ராசிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.அருளரசு உத்தரவின் பேரில், ராசிபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒட்டுநர் உரிமம் இன்றியும், வாகனங்களுக்கு உரிய ஆவணம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும், குடிபோதையிலும் வாகனம் ஒட்டுவோர் குறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும், திருட்டு வாகனம் குறித்தும் தணிக்கை செய்தனர். இதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டன.
பாதுகாப்பான விழிப்புணர்வு: பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி வாகன ஒட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியைகிக்கப்பட்டன. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.