நாமக்கல்

மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பொங்கல் விழா

DIN

குமாரபாளையம் ஸ்ரீகம்பத்துக்காரர் மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.  மாற்றுத் திறனாளி மாணவ,  மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு,  பரிசுகள் வழங்கப்பட்டன. 
 சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் பங்கேற்றுப் பேசினார்.  பள்ளியின் சிறப்பாசிரியர் லாவண்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT