முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் கன மழை

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.

Updated On : 15 மே, 2018 at 12:59 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.
பெரும் தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழையாகப் பெய்தது. மழை நீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு பிரதான சாலை, தெப்பக்குளம் சாலைப் பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரால், போக்குவரத்து பாதிப்பும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது. கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பியதால், மழை நீரோடு கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் சாலைகளில் ஓடியது. கோடை காலத்தில் கனத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.