மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 300 மனுக்கள் வரப்பெற்றன. அதனை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில், 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.97,000 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.