நாமக்கல்

டிராக்டர் மோதியதில் தனியார் கல்லூரி பணியாளர் சாவு

DIN

உலகப்பம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி பணியாளர் மீது டிராக்டர் மோதியதால் அவர் உயிரிழந்தார்.
திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் கணினி ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்தவர் துறையூரைச் சேர்ந்த முகமது சித்திக் (35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் எளையாம்பாளையம் பகுதியில் இருந்து உஞ்சனை நோக்கிச் சென்றுள்ளார். உலகப்பம்பாளையம் அரசுப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பக்கவாட்டில் திரும்பியதாகக் கூறப்படுகிறது. 
இதனால் நிலை தடுமாறிய முகமது சித்திக் சென்ற இருசக்கர வாகனம் டிராக்டரின் பின்னால்  மோதியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT