நாமக்கல்

இரண்டு திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்த உங்களை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது: கமல்ஹாசன்

DIN

இரண்டு திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாந்த உங்களை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது தெரிவித்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது:  பொறுத்திருந்து பொறுத்திருந்து பொங்கி எழுந்துள்ள கூட்டம் இது.  நீங்கள் எல்லோரும் ஒரு புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டுள்ளீர்கள்.  இரண்டு திராவிடக் கழகங்களையும் நம்பி ஏமாந்த உங்களை மக்கள் நீதி மய்யம்
வரவேற்கிறது.
பா.ஜ.க. குறித்து கமல்ஹாசன்  பேசுவதில்லை என்கிறார்கள்.  ஆனால், நான் சொல்கிறேன், இந்த இரண்டு கூட்டணிகளும் தவறுதான்.  இவர்களை அகற்ற வேண்டும். தேசத்தின் பன்முகத் தன்மையைக் கெடுக்க வந்துள்ள கட்சி பா.ஜ.க. இதுகுறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹேராம் திரைப்படத்தின் மூலம் எடுத்துக் கூறிவிட்டேன்.  திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் பிரசாரத்துக்குச் சென்ற கனிமொழியை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.  அதிமுக அமைச்சர்களும்,  பா.ஜ.க. அமைச்சர்களும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.  ஆனால், எங்களுக்கு இங்கு கூடியுள்ள கூட்டம் தான் உண்மையான நல்லவர்கள் கூட்டம்.  அதுவும் காசு வாங்காமல் வந்த கூட்டம்.  உங்கள் குரலாக தங்கவேலு மக்களவையில் பேசுவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT